KARTHIKAI DEEPAM TOMORROW – SIVASIVA ANBAESIVAM TRUST

🔥 சிவசிவ அன்பேசிவம் அறக்கட்டளை பதிவு எண்:100/2024 🔥

நாளை கார்த்திகை தீபம்🌹🌿🌹🌿🪔🪔🪔🪔🪔🪔🪔

அண்ணாமலையாா் திருவடிகளை அன்புடன் வணங்குகின்றேன். 🔥திருவண்ணாமலை கார்த்திகை தீப தரிசனத்தின் சிறப்புகள்🔥

🪔திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை நேரில் பார்ப்பவர்கள்,21 தலைமுறைக்கு முக்தி கிடைக்கும்.

🪔திருவண்ணாமலை தீபத்தன்று மலையை பார்த்து நமசிவாய சொன்னால்,அந்த மந்திரத்தை 3 கோடி தடவை உச்சரித்த புண்ணியம் கிடைக்கும்.

🪔திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் போது மலைக்கு உள் பகுதியிலும்,பூஜைகள் நடக்கும் ஒலி கேட்டதாக ரமணர்,சேஷாத்திரி சுவாமிகள் உள்பட பல அருளாளர்கள் கூறியுள்ளனர்.

🪔திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட பிறகு அதைப் பார்த்து வணங்கியபடி கிரிவலம் வந்தால்,அந்த ஜோதியின் கதிர்கள் நம் உடம்பில் பட்டு ஆன்மசக்தி அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

🪔தீபத் திருநாளில் 5 தடவை (மொத்தம் 70 கி.மீ. தூரம்) கிரிவலம் வந்தால்,அவர்கள் எவ்வளவு பெரிய பாவம் செய்திருந்தாலும்,அவற்றில் இருந்து முழுமையான விமோசனம் கிடைக்கும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

🪔மலை மீது தீபம் ஏற்றப்படும் போது,“தீப மங்கள ஜோதி நமோ!!நம”என்ற பாடலை பாடி வழிபட்டால் வாழ்வில் மங்களம் பெருகும்.

🪔கார்த்திகைத் தீபத்துக்கு மூன்றாவது நாள் மலையை பஞ்ச மூர்த்திகளும் வலம் வருவது மிகச்சிறப்பாக நடைபெறும்.

🪔திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை காண சித்தர்கள் வருவார்கள் என்பது நம்பிக்கை.அப்படி வரும் சித்தர்கள்,மலை உச்சியில் தீபம் ஏற்றும் கொப்பரை நெய்யில் சக்தி வாய்ந்த மூலிகைத் தைலங்களை சேர்த்து விடுவதாகச் சொல்கிறார்கள்.இதனால் தீபத்தில் இருந்து வெளிப்படும் புகை,தீய சக்திகளை அழிப்பதாக கருதப்படுகிறது.

🪔திருவண்ணாமலை மலை சுமார் 2,668 அடி உயரம் கொண்டது.கீழ் இருந்து மலை உச்சி வரை செல்ல சுமார் 8 கி.மீ. பாதை உள்ளது.மலை ஏற சுமார் 4 மணி நேரமாகும்.

🪔கார்த்திகை தீபத்துக்கு சர்வாலய தீபம்,
கார்த்திகை விளக்கீடு,
ஞானதீபம்,
சிவஜோதி,
பரஞ்சுடர் என்றும் பெயர்கள் உண்டு.கார்த்திகை தீபத்தன்று கிரிவலம் செல்பவர்களுக்கு ஆயிரம் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.

🪔கார்த்திகை தீபம் தினத்தன்று சிவலிங்கம் முன்பு நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தால்,அவர்களது வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என்பது நம்பிக்கை.

🪔கார்த்திகை தீபம் ஏற்றப்படும் காட்சியை நேரில் பார்த்து வழிபடுபவர்களுக்கு, சகல தானம் கொடுப்பதால்,கிடைக்கும் புண்ணியங்கள் கிடைக்கும்.

🪔கார்த்திகை மாதம்,கார்த்திகை நட்சத்திரத்தில் திருவண்ணாமலை தலத்தில் ஏதாவது ஒரு இடத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

🪔திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்ற பயன்படுத்தும் கொப்பரை சுமார் 2 ஆயிரம் லிட்டர் நெய் பிடிக்கும் அளவு கொண்டது.மலை உச்சியில் ஏற்றப்படும் தீபத்தின் ஒளி சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு தெரியும்.இந்த தீபம் சுமார் 11 நாட்கள் தொடர்ந்து எரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

🪔திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு பரணி தீபம்,
அண்ணாமலையார் தீபம்,
விஷ்ணு தீபம்,
நாட்டுக் கார்த்திகை தீபம்,
தோட்டக் கார்த்திகை தீபம்
என 5 வகையான தீபங்கள் ஏற்றப்படும்.

🪔சிவபெருமான் கார்த்திகை தீபநாளில் அக்னியில் நடனம் ஆடுவதாக ஐதீகம்.இந்த நடனத்துக்கு முக்தி நடனம் என்று பெயர்.

🪔கார்த்திகை தீபம் தினத்தன்று ஆலயங்களில் சொக்கப்பனை கொளுத்துவார்கள். ஆனால் திருவண்ணாமலையில் சொக்கப்பனை கொளுத்தும் பழக்கம் இல்லை.

🪔தீப நாளில் மலை மேல் தீபம் காண முடியாதவர்கள், தீப தரிசன நேரத்தில் அதை நினைத்தாலே,அதற்குரிய பலன்கள் கிடைக்கும் என்பது பெரியோர் வாக்கு.

🪔திருவண்ணாமலை கார்த்திகை தீபத்துக்கு நிகராக இது வரை எந்த ஆலயத்திலும் ஜோதி வழிபாடு ஏற்பட்டதில்லை.

🪔திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபம்,அண்டசராசரங்களுக்கும் தீப விளக்காக கருதப்படுகிறது. உலகத்தை எல்லாம் இயக்குகின்ற பரம்பொருள் ஒன்றே என்பதை “இறைவன் ஒருவனே”என்ற தத்துவத்தை உணர்த்துகிறது.

🪔கார்த்திகை தீபத்தன்று அதிகாலை திருவண்ணாமலை கோவிலில் பரணி நட்சத்திர நேரத்தில் ஏற்றப்படும் பரணி தீபத்தை அங்குள்ள சொர்ண பைரவர் சன்னதியில் வைத்து விடுவார்கள்.பிறகு மாலையில் அதைத்தான் மலை உச்சிக்கு எடுத்துச் சென்று தீபத்தை ஏற்றுவார்கள்.

🪔திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதும் வணங்கினால் பாவம் நீங்கி பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகமாகும்.

🪔திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்டதும், “அண்ணாமலையாருக்கு அரோகரா”என்று பக்தர்கள் முழக்கமிடுவார்கள்.…

கார்த்திகை தீபத்தை எப்படி கொண்டாடுவது.. #தீபம் #கார்த்திகைதீபம் #2024 #tranding #viralvideos #viral

Leave a Reply

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping
×